Wednesday 21 August 2013

ஆறுதல்

எந்த உறவின் மொழியிலும் இல்லாத ஆறுதல் உன் விழி பார்வையில்....

தூரம்

தொட்டு விடும் தூரம்தான் என்று எண்ணி,
கை நீட்டி தொட்டு விட நடக்கும் குழந்தை போல,
நானும் உன்னை தொடர்கிறேன் உன் தூரம் அறியாமல்...
...................................BA...............................................

Tuesday 20 August 2013

கவிதை

நிறைவேறாத ஆசைகளை , எதிர்பார்ப்புகளை
நிறைவேற்றிக்கொள்ள பயன்படுத்தப்படும் கருவி..
.......................... அருள் ....................................

காலணி

காலை பாதுகாக்கும் நான் கோவிலுக்கு வெளியே,
காலை வாறும் பலர் கோவிலுக்கு உள்ளே,
அப்படி என்ன பாவம் செய்தேன் என்று எனக்கு இந்த அநீதி?
உள்ளே இருக்கும் கடவுளை கேட்டிருக்கிறேன், இன்னும் பதில் இல்லை...
............................................ அருள் ....................................................

அது ஒரு கனாக்காலம்...

விதிமுறை இல்லா உறவுகள்,
வரைமுறை இல்லா வசனங்கள்,
இன்றைக்கும் சிரிப்பு வரும் மொக்கைகள்,
என்றும் தித்திக்கும் வகுப்பறை கலாட்டக்கள்,
பொய்யான கோபங்கள்,
மறக்க முடியாத இழப்புகள்,
அது ஒரு கனாக்காலம்....
................................ அருள்...............................

Sunday 18 August 2013

கோபம்

என் புகைப்படம் மீது எனக்கு அதீத கோபம்...
உன் தொடுதல்களை அது பெரும் போது,
எப்போதும் உன்னுடன் இருப்பதை நினைத்து.
சமாதனமடைவேன் எனக்கும் ஒரு காலம் வரும் என்று...
..................... அருள்.........................................................

உறவுகள்

பாசக்கார உறவினர்கள் இருப்பது ராசுமதுறவன் சினிமாவில் மட்டுமே.....
தேடிக்கொண்டு தான் இருகிறேன் அது போன்ற உறவுகளை..
எதையும் எதிர்பார்க்காமல் அன்பு செலுத்தும் நெஞ்சங்களை...
நேரத்திற்கு ஏற்றார்போல் பழகாத அன்பை...
அப்படி ஒரு உறவை அடையாளம் காணும் பொது ,
அவர்களுக்காக எதையும் செய்யலாம்...